திருக்குறள் - 768     அதிகாரம்: 
| Adhikaram: pataimaatchi

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

குறள் 768 - திருவள்ளுவர் - ThiruValluvar

"adaldhakaiyum aatralum illeninum thaanai" Thirukkural 768 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தானை - தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் - பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும். ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தறுகண் பேராண்மை என்ப - அஞ்சாதும் இரக்கமின்றியும் பகைவரொடு பொரும் கடுமறத்தைச் சிறந்த ஆண்டன்மை என்று சொல்வர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு (என்ப) - ஆயினும், அப்பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தவிடத்து இரங்கி அதை நீக்குதற் பொருட்டு அவர்க்கு உதவி செய்தலை, அவ்வாண்டன்மைக்குக் கூர்மையென்று சொல்வர் மறநூலார். இராவணன் முதல் நாட்போரில் தன்படையும் படைக்கலமுந் தேருமிழந்து தன்னந்தனியனாய் நின்றபோது. இராமன் இரங்கி "இன்றுபோய் நாளைப் படையொடுவா." என்று கூறிவிடுத்ததாகவுள்ள கம்ப விராமாயணச் செய்தி, ஊராண்மைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். "ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த பூளை யாயின கண்டனை, யின்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் (யுத்த 1218) இங்ஙனம் போர்க்களத்தில் தனித்து நின்ற பகைவர்க்குதவுதலும், புறங்கொடுத்தார் மீதும் அடைக்கலம் வேண்டினார் மீதும் படைக்கலம் தொடாமையுமான ஊராண்மையைத் 'தழிஞ்சி' என்னும் வஞ்சித்துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை (3 : 20) கூறும். இரு கூற்றும் ஓரே சாராருடையதாகையால், 'என்ப' என்பது பின்னும் இயைந்தது. எஃகு ஆகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெற்றிபெரும் தன்மையும், அதற்கான ஆற்றலும் இல்லை என்றாலும், அதன் அமைப்பு முறையால் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

Thirukkural in English - English Couplet:


Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.

ThiruKural Transliteration:


adaldhakaiyum aatralum illeninum thaanai
padaiththakaiyaal paadu peRum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore