திருக்குறள் - 862     அதிகாரம்: 
| Adhikaram: pakaimaatchi

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

குறள் 862 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anpilan aandra thunaiyilan thaan dhuvvaan" Thirukkural 862 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு இலன் - தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; ஆன்ற துணை இலன் - சிறந்த துணையில்லதவனாகவும், தான் துவ்வான்-அவற்றோடுதானும் வலிமையில்லாதவனாகவும் உள்ள ஒருவன்; ஏதிலான் துப்பு என்பரியும்- பகைவன் வலிமையை எங்ஙனந் தொலைப்பான்? இம்மூன்று நிலைமையையும் ஒருங்கே யுடையவன் எளிதாய் வெல்லப்படுவான் என்பதாம், ஆனுதல் நிறைதல் அல்லது போதியதாதல், துத்தல் வலியுறுத்தல். ’துப்பு’ தொழிற்பெயரடிப் பண்புப் பெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பில்லாதவன், நெருங்கிய துணையில்லாதவன், சுயமாக சாதிக்க முடியாதவன் என ஏதும் இல்லாதவன் பகை என்ன இலக்கு அடைய முடியும்?.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியும்?

Thirukkural in English - English Couplet:


No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

ThiruKural Transliteration:


anpilan aandra thuNaiyilan thaan-dhuvvaan
enpariyum Edhilaan thuppu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore