திருக்குறள் - 992     அதிகாரம்: 
| Adhikaram: panputaimai

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

குறள் 992 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anputaimai aandra kutippiraththal ivvirandum" Thirukkural 992 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்மேலன்புடையனாதலும் உலகத்தோடமைந்த குடியின்கட் பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை யென்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி. (அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ; பண்புடைமை என்னும் வழக்கு - பண்புடைமையென்னும் ஒழுக்கத்திற்கு இன்றியமையாத இயல்களாம். அமைதல் நிறைதல். உம்மை முற்றும்மை, வழக்கிற்குக் கரணிய மானவற்றை வழக்கென்றே கருமியமாகச் சார்த்திக் கூறினார். இவ்விரு குறளாலும் பண்புடைமைக்கு ஏதுவான நிலைமைகள் கூறப்பட்டன.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பை உடமையாக கொள்ளல், சிந்திக்கத் தகுந்த பிறப்பாக வாழ்தல் என இவ்விரண்டும் பண்புடைமை என்பது வழக்கு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.

Thirukkural in English - English Couplet:


Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

ThiruKural Transliteration:


anputaimai aandra kutippiRaththal ivviraNdum
paNpudaimai ennum vazhakku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore