திருக்குறள் - 837     அதிகாரம்: 
| Adhikaram: pedhaimai

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

குறள் 837 - திருவள்ளுவர் - ThiruValluvar

"edhilaar aarath thamarpasippar paedhai" Thirukkural 837 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து. இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஒரு தொடர்பு மில்லாத அயலார் நிரம்ப வுண்ணத் தன் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினரும் உண்ணுதற்கின்றிப் பசியோடிருப்பர். எல்லா நுகர்ச்சியும் பெறுதற்கேற்றதென்பது தோன்றப் 'பெருச்செல்வம்' என்றும், அது சொந்தத் தேட்டன்றித் தெய்வத்தால் வந்ததென்பது தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாவகையிலும் இன்பம் நுகர்தல் தோன்ற 'ஆர' என்றும், உறவினர் உணவுமின்றி வருந்துதல் தோன்றப் 'பசிப்பர்' என்றும், கூறினார். ஊரெங்கும் பேர், வீடு பட்டினி, தமக்கை கிண்ணிப் பிச்சையெடுக்கத் தம்பி கும்பகோணத்திற் கோதானம் பண்ணுகின்றான். என்னும் பழமொழிகள் இங்குக் கருதத்தக்கன. இக்குறளால், பேதை பெற்ற செல்வம் தமர்க்கன்றிப் பிறர்க்கே பயன்படுமென்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தொடர்பற்றவர்கள் பயனடைவார்கள் உறவினர்கள் பசித்திருப்பார்கள் பேதைக்கு பெருஞ் செல்வம் வாய்ப்பதால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

Thirukkural in English - English Couplet:


When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

ThiruKural Transliteration:


Edhilaar aarath thamarpasippar paedhai
perunjelvam utrak kadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore