திருக்குறள் - 1077     அதிகாரம்: 
| Adhikaram: kayamai

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

குறள் 1077 - திருவள்ளுவர் - ThiruValluvar

"eerngai vidhiraar kayavar kotirudaikkum" Thirukkural 1077 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு - தம் அலகைப் பெயர்த்தற்கு வளைத்த கையினையுடையா ரல்லாதார்க்கு; கயவர் ஈர்ங்கை விதிரார் - கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற் கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார். கயவர் வலியார்க்கன்றி மெலியார்க்கு இம்மியுங் கொடார் என்பது, இக்குறளால் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈரக் கைகளைக் கூட உதராத கயவர்கள் மூக்கை உடைக்கும் வளைந்த கை உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்து உதவமாட்டார்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லாதவருக்கு, கீழ்மக்கள், தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

ThiruKural Transliteration:


eerngai vidhiraar kayavar kotiRudaikkum
koon-kaiyar allaa thavarkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore