திருக்குறள் - 1202     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

குறள் 1202 - திருவள்ளுவர் - ThiruValluvar

"enaiththonaru inidhe kaan kaamamdhaam veezhvaar" Thirukkural 1202 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்-தம்மாற்காதலிக்கப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைத் தவர்க்குப் பிரிவினால் வரக்கூடிய துன்பமொன்றும் இல்லாமற் போய் விடுகின்றது; காமம் எனைத்து இனிது ஒன்றே காண்-அதனாற் காமம் எத்துணையேனும் இன்பந் தருவதொன்றே காண். புணர்ந்தவிடத்தும் பிரிந்தவிடத்தும் ஒப்ப வினிதென்பான்-எனைத்து மினிதென்றான், தான் ஆற்றிய வகை கூறியவாறு. ஏகாரம் தேற்றம். காண் முன்னிலை யாசை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்படி என்றாலும் இனிமையானதே காமத்தில் வீழ்பவர் நினைக்க ஒட்டிக் கொள்ள வரும் ஒன்று இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒருவகையில் இனிமையானதே!

Thirukkural in English - English Couplet:


How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

ThiruKural Transliteration:


enaiththonaru inidhe-kaan kaamamdhaam veezhvaar
ninaippa varuvadhondru ael.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore