திருக்குறள் - 991     அதிகாரம்: 
| Adhikaram: panputaimai

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

குறள் 991 - திருவள்ளுவர் - ThiruValluvar

"enpadhaththaal eydhal elidhenpa yaarmaattum" Thirukkural 991 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடைமையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


யார்மாட்டும் எண்பதத்தால் - எல்லாரிடத்தும் எளிய செல்வியராயிருத்தலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - பண்புடையராய் ஒழுகும் நெறியை எளிதாயடையலாமென்று கூறுவர் அறநூலார். நற்குணங்கள் நிறைந்து எளிய செவ்வியராகவு மிருப்பின், பண்புடைமைதானே யுண்டாகுமாதலின், 'எண்பதத்தா லெய்த லெளி தென்ப ' என்றார். எளிய செவ்வியாவது, எளிதாய்க் கண்டுரையாடற்கேற்ற நிலைமை. 'என்ப' என்றதனால், திருக்குறட்கு முன்பும் தமிழற நூல்கள் இருந்தமை யறியப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எண்களைப் போல் யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளுடன் யாரிடமும் எளிமையாக பழுகுதலே பண்புடைமை என்பது வழக்கு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.

Thirukkural in English - English Couplet:


Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

ThiruKural Transliteration:


eNpadhaththaal eydhal eLidhenpa yaarmaattum
paNputaimai ennum vazhakku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore