திருக்குறள் - 1064     அதிகாரம்: 
| Adhikaram: iravachcham

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

குறள் 1064 - திருவள்ளுவர் - ThiruValluvar

"idamellaam kollaath thakaiththae idamillaak" Thirukkural 1064 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து. இஃது இரவாதார் பெரிய ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு-ஒரு சிறிதும் பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு; இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-உலகங்களெல்லாம் ஒன்றாகக் கூடினும் அவற்றில் இட்டுவைக்கும் இடமெல்லாம் கொள்ளாத பெருமையை யுடையதாம். மானமும் பெருமையும் நாணும் சால்பின் உறுப்புக்களாதலின், அவை இரவை அறவே தடுக்குமென்பதாம். இடம் உலகில்வாழ இடந்தருஞ் செல்வம். இடம்-இடன், கடைப்போலி. "இடனில் பருவத்தும்" (குறள்,218) என்றமை காண்க. ஏகாரம் தேற்றம், உம்மை இழிவு சிறப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருக்கும் இடம் முழுவதும் போதுமானது இல்லை தனக்கு இடம் இல்லை என்று இரந்து கேட்காதவரின் முன்மாதிரியான பண்புக்கு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நுகர் பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.

Thirukkural in English - English Couplet:


Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

ThiruKural Transliteration:


idamellaam koLLaath thakaiththae idamillaak
kaalum iravollaach chaalpu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore