திருக்குறள் - 900     அதிகாரம்: 

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

குறள் 900 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irandhamaindha saarputaiyar aayinum uyyaar" Thirukkural 900 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின். இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறந்து அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறந்து அமைந்த சீரார் செறின்- மாபெருந் தவமுனிவர் வெகுள்வாராயின்; இறந்து அமைந்த சார்பு உடையவராயினும் உய்யார் - அவரால் வெகுளப்பட்டவர் தலைசிறந்த துணையையுடையவராயினும் தப்பிப் பிழையார். சீருடைய தவவலிமை 'சீர்' எனப்பட்டது. 'இறந்தமைந்த சார்பு'கள் சோவரண். மாபெருந் தொல்படை, பேரரையர் நட்பு முதலியன. 'செறின்' என்பதற்கு 897-ஆம் குறளில் உரைத்தவாறுரைக்க. இவ்வைந்து குறளாலும் முனிவரைப் பிழைத்தலின் தீமை கூறப்பட்டது. உம்மை உயர்வு சிறப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செத்தாரைப் போல் (துறந்தவர்) சிறப்புகள் பெற்று வாழ்பவர் என்றாலும் நற்கதி அடைய முடியாது வாழும் உயர்ந்தவர் சினம் அடைந்தால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப்பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள்; அப்போதே அழிவார்கள்.

Thirukkural in English - English Couplet:


Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they're lost.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.

ThiruKural Transliteration:


iRandhamaindha saarputaiyar aayinum uyyaar
siRandhamaindha seeraar seRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore