திருக்குறள் - 1134     அதிகாரம்: 

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

குறள் 1134 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaamak kadumpunal uykkum naanodu" Thirukkural 1134 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


( நாணும் நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகவின் , அதனால் அவை நீங்குவனவல்ல என்ற தோழிக்குத் தலை மகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை என்னும் புணை - நான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை ; காமக் கடும்புனல் உய்க்குமே - காமமாகிய பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றதே ! நான் என்செய்வேன் !. புணையென்றது மிதவையும் கட்டுமரமும் பரிசலுந் தெப்பமும் போண்ற கடத்தக் கருவிகளை . அவற்றை என்னோடு அடித்துக்கொண்டு போகுமளவு வெள்ளம் பெருக்கும் வேகமுங் கொண்ட தென்பது தோன்றக் ' கடும்புனல் ' என்றாள் . ஏகாரம் இரங்கற் பொருட்டு .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் என்ற கடுமையான நீர் பெருக்கு அழித்துவிடும் வாழ வைக்கும் நாணத்துடன் நல்ல ஆண்மை என்னும் தோணியை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்!

Thirukkural in English - English Couplet:


Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.

ThiruKural Transliteration:


kaamak kadumpunal uykkum naaNodu
nallaaNmai ennum puNai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore