திருக்குறள் - 1131     அதிகாரம்: 

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

குறள் 1131 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaamam uzhandhu varundhinaarkku emam" Thirukkural 1131 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது . ) காமம் உழந்து வருந்தினார்க்கு - பெறற்கரிய மகளிரொடு காமவின்பம் நுகர்ந்து பின்பு அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு ; ஏம மடல் அல்லது வலி இல்லை - தொன்று தொட்டுக் காப்பாக இருந்துவருகின்ற மடலேற்றமன்றி வேறொரு வலிமையு மில்லை . ஏமமாதல் அத்துன்பம் நீங்குமாறு அந்நுகர்ச்சியை மீளத்தருதல் , பண்டைநாளிலும் என்போன்ற ஆடவர் இம்முறையே கையாண்டு வந்திருக்கவும் , நான் உன்னை நம்பி அதைப் புறக்கணித்தேன் . இன்று நீ எனக்குத் துணையல்லாமையை அறிந்தேனாதலின் , அவ்வழியையே கடைப்பிடித்து இன்பம் நுகரக் கருதுகின்றேன் என்றாவாறு .வலி, ஆகு பொருளது . மடலேறும் வகை வருமாறு :- தன் காதலியைப் பெறாத காதலன் ஆடைகளைந்து நீர்ச்சீலையணிந்து , உடம்பெல்லாம் சாம்பரைப் பூசி , எருக்கமாலை யணிந்து , தன் காதலியின் உருவம் எழுதிய படத்தைக் கையிலேந்திக் கொண்டு , அதையே நோக்கி , அவளிருக்கும் ஊர் நடுவே எல்லாருங் காணத் தவநிலையிலிருப்பன் . அவ்வூர்த்தலைவர் அவனைக் கண்டு காதலாய்விற்கு அவன் உடம்பட்டபின் , அவனைப் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிலைமேலேற்றிப் பெருந் தெருவூடிழுத்துச் செல்வர் . கருக்குப் பட்ட விட மெல்லாம் அரத்தந் தோன்றாது விந்து நீர் தோன்றின் , அவன் காதலியை அவனொடு கூட்டிவைப்பர் ; இன்றேல் வையார் . இது அநாகரிகமும் பேதைமையும் மிக்க முந்து கால வழக்காதலின் , தமிழிலக்கியத்திற் குறித்திருப்பதெல்லாம் அதை நினைவுறுத்தலேயன்றி வேறன்றென்க .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் பழகி பின் ஒரு காரணத்தால் வருந்தும் ஒருவருக்கு பாதுகாப்பு பணிமுறை முடங்கல் இன்றி வலி தீராது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை.

Thirukkural in English - English Couplet:


To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

ThiruKural Transliteration:


kaamam uzhandhu varundhinaarkku Emam
matalalladhu illai vali.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore