திருக்குறள் - 402     அதிகாரம்: 
| Adhikaram: kallaamai 2

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

குறள் 402 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kallaadhaan sorkaa murudhal mulaiyirandum" Thirukkural 402 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். ('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதான் சொல் காமுறுதல் - க ல் வி யி ல் லா தவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்ற அற்று-இயல்பாகவே முலையிரண்டுமில்லாத பேடி பெண்டன்மையை விரும்பினாற்போலும். பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும்அந் தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். (தொல் 487) ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே(தொல் 495) என்றவாறு, பேடிப்பெயர் பெண்பாலீறு பெ ற் ற து. உம்மை முற்றும்மை. இருவர் காமுறுதலும் இழிநிலைப்பட்ட தென்பதாம். இனி, கல்லாதான் சொல்லைப் பிறர் காமுறுதல் முலையிரண்டுமில்லாதாள் பெண்டன்மையைப் பிறர் காமுறுதல்போலும், என்றுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி இல்லாத ஒருவன் அவையில் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுதல் முலை இரண்டும் இல்லாத (முகிழ்த்தல் இல்லாத) பெண்ணான ஒருத்தி பெண்ணின்பத்தை விரும்பியது போலாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி அறிவு இல்லாதவர் கருத்து சொல்ல ஆசைப்படுவது மார்பழுகு இல்லாதவள் பெண்மைக்கான ஆசைக்கொள்வதைப் போன்றது

Thirukkural in English - English Couplet:


Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

ThiruKural Transliteration:


kallaadhaan soRkaa muRudhal mulaiyiraNdum
illaadhaaL peNkaamuR Ratru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore