திருக்குறள் - 1055     அதிகாரம்: 
| Adhikaram: iravu

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

குறள் 1055 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karappilaar vaiyakaththu unmaiyaal kannindru" Thirukkural 1055 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்நின்று இரப்பவர் மேற்கொள்வது-வாய் திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லமாட்டாது ஒருவருக்கு முன் நிற்கும் நிலையினாலேயே இரக்கும் மானியர், தம் உயிரோம்பும் பொருட்டு இரத்தலை மேற்கொள்வது; கரப்பு இலார் வையகத்து உண்மையான்-தம்மிடத்துள்ள பொருளைக் கரவாது ஈயும் ஒருசிலர் உலகத்து இருப்பதனாலேயே. அத்தகையார் இல்லையெனின், தன்மானமுள்ள இரப்போரும் இறப்பர் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெறுப்பற்றவர் உண்மையுடன் இவ் வையகத்தில் இருப்பதால் கேட்பவர் அவர் கண் முன் நிற்பதைச் செய்கிறார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முன்னால் நின்ற போதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.

Thirukkural in English - English Couplet:


Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.

ThiruKural Transliteration:


karappilaar vaiyakaththu uNmaiyaal kaNNindru
irappavar maeRkoL vadhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore