திருக்குறள் - 1123     அதிகாரம்: 

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

குறள் 1123 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karumaniyir paavaainhee poadhaayaam veezhum" Thirukkural 1123 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


( இடந்தலைப் பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது . ) திருமணியில் பாவாய் - என் கண்ணின் கருமணியின்கண் தங்கும் பாவையே ! நீ போதாய் - நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக ; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - ஏனெனின் , எம்மால் விரும்பப்படும் அழகிய நெற்றியை யுடையாட்கு இருக்க வேறிடமில்லை . யான் இவளைக் காணாதிருத்தல் கூடாமையின் , என்றும் என் கண்ணிற்குள்ளேயே இருக்கத் தக்காள் . அதற்குள் இருவர் இருக்க இடமின்மையின் , உன்னினுஞ் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்துவிட்டு நீ வெளியேறிவிடுவாயாக என்று , தன் மறவாக் காதலைத் தெரிவித்த வாறாம் . ' யாம் ' பெருமிதப் பன்மை அல்லது அரசப்பன்மை . ' திருநுதல் ' அன்மொழித்தொகை .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கருமணியில் இருக்கும் பாவையே நீ போய்விடு கண்ணில் படும் அழகிய நெற்றியுடைவள் இருக்க இல்லை இடம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.

Thirukkural in English - English Couplet:


For her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone! .

ThirukKural English Meaning - Couplet -Translation:


O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

ThiruKural Transliteration:


karumaNiyiR paavaainhee poadhaayaam veezhum
thirunhudhaRku illai idam.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore