திருக்குறள் - 312     அதிகாரம்: 
| Adhikaram: innaaseyyaamai

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

குறள் 312 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karuththuinnaa seydhavak kannum maruththinnaa" Thirukkural 312 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கறுத்து இன்னா செய்த அக்கண்ணும்- ஒருவன் தம்மேற் கறுவுகொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும்; மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்- திருப்பித்தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம். இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. இதனாற் பழிக்குப் பழி செய்யும் பகைமை பற்றி இன்னா செய்தல் விலக்கப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெறுப்புடன் துன்பம் தருபவருக்கும் எதிர்த்து துன்பம் செய்யாதது அழுக்கு அற்றவர்களின் பண்பு.

Thirukkural in English - English Couplet:


Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

ThiruKural Transliteration:


kaRuththuinnaa seydhavak kaNNum maRuththinnaa
seyyaamai maasatraar koaL.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore