திருக்குறள் - 604     அதிகாரம்: 
| Adhikaram: matiyinmai

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

குறள் 604 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kutimatindhu kutram perukum matimatindhu" Thirukkural 604 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும். ('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு -சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு - குடிமடிந்து குற்றம் பெருகும். - குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும் 'உஞற்று' என்னும் சொல்வரலாறு 592-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது. குற்றம் மேற் கூறப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பலிலேயே வீழ்ந்தமிழிந்து சிறந்த முயற்சி இல்லாதவர்களுக்குத் தனது குடியும் அழிந்து குற்றமும் பெருகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளது சிறத்தல் என்ற வாழ்வு அழிந்து குற்றங்கள் பெருகும் சோம்பலால் கவரப்பட்டு உலகில் இருப்பவர்களுக்கு.

Thirukkural in English - English Couplet:


His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.

ThiruKural Transliteration:


kutimatindhu kutram perukum matimatindhu
maaNda uGnatri lavarkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore