திருக்குறள் - 456     அதிகாரம்: 
| Adhikaram: sitrinanjeraamai

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

குறள் 456 - திருவள்ளுவர் - ThiruValluvar

"manandhooyaark kechchamnhan raagum inandhooyaarkku" Thirukkural 456 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் -தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும். பெற்றோரைப்போற் பிள்ளைகளிருப்பதே பெரும் பான்மையாதலால் ' எச்ச நன்றாகும்' என்றும், நல்லினத்தோடெண்ணிச் செய்யும் வினை நன்றாய் முடியுமாதலால் 'இல்லை நன்றாகா வினை ' என்றும் கூறினார். இங்கு 'எச்சம்' என்பதற்குப் புகழ் என்றும் உரைகொள்வர், அடுத்த குறள் "இனநலம் எல்லாப் புகழுந் தரும்" என்று கூறுவதால், அவ்வுரை பொருந்துவதன்றாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் தூய்மையானவர்களுக்கு எஞ்சி நிற்பதாகிய எச்சம் சிறப்பானதாக அமையும். இனம் தூய்மையானவர்களுக்கு நன்றாகாத செயல் எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனதின் தூய்மையால் முடிவுகள் நன்றாக அமையும் இனத்தின் தூய்மையை காப்பவருக்கு இல்லை நன்மைகள் விளையும் வினை.

Thirukkural in English - English Couplet:


From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

ThiruKural Transliteration:


manandhooyaark kechchamnhan Raagum inandhooyaarkku
illainhan Raagaa vinai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore