திருக்குறள் - 825     அதிகாரம்: 
| Adhikaram: kootaanatpu

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

குறள் 825 - திருவள்ளுவர் - ThiruValluvar

"manaththin amaiyaa thavarai enaiththondrum" Thirukkural 825 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தௌ¤தற்பாலதன்று. இது சொல்லினால் அறிதலரிதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தௌ¤தல் முறைமைத்தன்று, நீதிநூல். ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தௌ¤தல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தின் அமையாதவரை-உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை; எனைத்து ஒன்றும்-எத்தகைய வினையிலும்; சொல்லினால் தேறற்பாற்று அன்று-அவர் சொல்லைக்கொண்டு அவரை நம்பத்தக்க முறைமைத்தன்று அரசியல் நூல். 'எனைத்தொன்றும்' என்பதற்கு, எத்துணைச் சிற்றளவும் என்று உரைப்பினும் அமையும், அன்மைச்சொல் அரசியல் நூல் என்பதை அவாவி நின்றது. பகைமையை மறைத்துச் சொல்லும் வஞ்சனைச் சொல்லை மெய்யென்று கொண்டு, அவரை எவ்வினைக்கும் நம்புவது அரசியல்நூல் முறைமையன் றென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் நன்கு அமையாதவரை எதன் பொருட்டும் அவர் சொற்களைக் கொண்டு தேர்ந்த முடிவுக்கு வரக்கூடாது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, எந்த ஒருவகையாலும், அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.

Thirukkural in English - English Couplet:


When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.

ThirukKural English Meaning - Couplet -Translation:


In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

ThiruKural Transliteration:


manaththin amaiyaa thavarai enaiththondrum
sollinaal thaeRaRpaatru andru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore