திருக்குறள் - 1207     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

குறள் 1207 - திருவள்ளுவர் - ThiruValluvar

"marappin evanaavan markol marappariyaen" Thirukkural 1207 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அக் கூட்டக்காலை யின்பத்தை ஒருபோதும் மறத்தலறியேனாய் இன்று அதை நினைக்கும்போது கூட; பிரிவுத் துன்பம் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! மறப்பின் எவன் ஆவன் - இனி, அதை அடியோடு மறந்துவிடின் நான் என்ன நிலைமையடைவேனோ! இறைவன்தான் அறிவான். மறத்தற்கும் உள்ளுதற்கும் செயப்படுபொருள் அதிகாரத்தாலும் மேற்குறளினின்றும் வந்தது. 'மன்' நான் உயிர்வாழ வேறொரு வழியும் பெற்றிலேன் என்பது பட நின்றமையின் ஒழியிசைக்கண் வந்தது. 'கொல்' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறந்தால் என்ன ஆவேனோ? என்பதால் மறப்பதை அறியவில்லை. மற்றபடி நினைப்பும் என் நெஞ்சத்தை சுடுகிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே!

Thirukkural in English - English Couplet:


If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.

ThiruKural Transliteration:


marappin evanaavan markol marappariyaen
ullinum ullam sudum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore