திருக்குறள் - 603     அதிகாரம்: 
| Adhikaram: matiyinmai

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

குறள் 603 - திருவள்ளுவர் - ThiruValluvar

"matimatik kondozhukum paedhai pirandha" Thirukkural 603 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும'¢ என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி -அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் அறிவிலி பிறந்தகுடி; தன்னினும் முந்து மடியும் -அவனினும் முற்பட அழிந்து போம். அழிவு தருவதை உடன்கொண்டொழுகலாற் ' பேதை ' என்றும் ,அவனாற் காக்கப்படாமையால் அவனினும் முந்துற வழியும் என்றும் ,கூறினார். முந்துற வழிதலாவது அவனொடு தொடர்பின்றி மறைதல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


விடவேண்டிய சோம்பலினைத் தன்னுள்ளே வைத்து நடக்கின்ற அறிவில்லாதவன் பிறந்துள்ள குடியானது, அவனுடைய காலம் முடிவதற்குள் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பிச் சோம்பலை உரிமையாகக் கொண்ட அறிவற்றவர் தான் பிறந்த குடும்பம் தனக்கு முன்னமே அழிவதைக் காண்பார்.

Thirukkural in English - English Couplet:


Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

ThiruKural Transliteration:


matimatik koNdozhukum paedhai piRandha
kutimatiyum thanninum mundhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore