திருக்குறள் - 1082     அதிகாரம்: 
| Adhikaram: thakaiyananguruththal

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

குறள் 1082 - திருவள்ளுவர் - ThiruValluvar

"noakkinaal noakkedhir noakkudhal thaakkanangu" Thirukkural 1082 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து. (மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(மாந்தப் பெண்ணாதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினாலான வருத்தங் கூறியது.) நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்- இத்தகைய அழகிய தோற்றமுடையாள் என் நோக்கிற்கு எதிர்நோக்குதல்; தாக்கு அணங்குதானைக் கொண்ட அன்னது உடைத்து- தானே தானே தாக்கி வருத்தும் ஒரு தெய்வப்பெண்,தனக்குத் துணையாக ஒரு படையையுஞ் சேர்த்துக் கொண்டாற் போலும் தன்மையை யுடையதாம். அழகால் தன்னை வருத்துதல் மேலும், காதல் தோன்றாத எதிர்நோக்கால் தன்னை வருத்துதல் கூறியவாறு. தாக்கணங்கு சூரரமகள். 'தானைக்கொண்டு' எதுகை நோக்கி வலி மிக்கது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பார்த்தாள் நேருக்கு நேர் பார்க்க, தாக்க வந்த தேவதை படை கொண்டு ஒன்றும் இல்லாதபடி செய்தது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


என்னை அவள் நோக்கினாள்.

Thirukkural in English - English Couplet:


She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band.

ThirukKural English Meaning - Couplet -Translation:


This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

ThiruKural Transliteration:


noakkinaaL noakkedhir noakkudhal thaakkaNangu
thaanaikkoN tanna thudaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore