திருக்குறள் - 1155     அதிகாரம்: 
| Adhikaram: pirivaatraamai

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

குறள் 1155 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ompin amaindhaar pirivoampal matravar" Thirukkural 1155 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல்-தோழி! நீ என்னுயிரைப் பேணிக்காப்பாயாயின், அதற்கு இன்றியமையாத் துணைவராக அமைந்தவரின் பிரிவு நேராமற் காப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது-பின்பு அவர் செலவழுங்குவாரின்றிச் சென்று விடின், என் உயிருஞ் சென்றுவிடும்; அதன்பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். 'அமைந்தார்' என்னுஞ்சொல் இறைவன் ஏற்பாட்டின்படி அமைந்தவர் என்னுங் குறிப்பினது. (ஒ. நோ; 'marriages are made in heaven.) 'மற்று' பின்மை அல்லது வினைமாற்றுப் பொருளில் வந்தது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உறவு பாராட்டுபவர் பிரிவு எற்படாதபடி உறவு பாராட்டவேண்டும் மற்றபடி விலகிவிட்டால் அரிதாகிவிடும் கூடுதல்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

Thirukkural in English - English Couplet:


If you would guard my life, from going him restrain
Who fills my life! If he depart, hardly we meet again.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.

ThiruKural Transliteration:


ompin amaindhaar pirivoampal matravar
neengin aridhaal puNarvu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore