திருக்குறள் - 1329     அதிகாரம்: 
| Adhikaram: ootaluvakai

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

குறள் 1329 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ootuka mannoa oliyizhai yaamirappa" Thirukkural 1329 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) ஒளியிழை மன் ஊடுக - ஒளி வீசும் அணிகலங்களையுடையாள் இன்னும் எம்மொடு மிகுதியும் ஊடுவாளாக; யாம் இரப்ப இரா மன் நீடுக- அவள் அங்ஙனம் ஊடுதற்கும் யாம் அதை யுணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலமிருக்கும் வகை இவ்விரவு மிகுதியும் நீடுவதாக. 'ஊடுக' , 'நீடுக' என்பன ஆர்வ வியங்கோள் வினைகள். 'மன்' மிகுதிப்பொருளது ஓகாரங்கள் அசைநிலை. 'ஒளியிழை' அன்மொழித்தொகை. பின்னர்ப் பேரின்பம் பெறக் கூடுதல் உறுதியாதலின், அவ்விராமுழுதும் ஊடலே நிகழினும் நன்றேயென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடுதல் செய்யவேண்டும் ஒளியைப் போன்றவள் அதுவே இரவை நீளச் செய்யும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக!

Thirukkural in English - English Couplet:


Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.

ThiruKural Transliteration:


ootuka mannoa oliyizhai yaamirappa
needuka mannoa iraa.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore