திருக்குறள் - 989     அதிகாரம்: 
| Adhikaram: saandraanmai

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

குறள் 989 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oozhi peyarinum thaampeyaraar saandraanmaikku" Thirukkural 989 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றாண்மைக்க ஆழி எனப்படுவார் - சால்பு என்னும் கடலிற்குக் கரையாகச் சொல்லப்படுவார்; ஊழிபெயரினும் - ஊழிமுடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும் ; தாம் பெயரார் - தாம் தம் சால்பெல்லை கடவார். சால்பின் பெருமை பற்றி அதனைக் கடலாக்கியும் , அதன் எல்லையில் நிற்றலின் அதை யுடையாரை அதன் கரையாக்கியும், கூறினார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தன்னை நிலைத்த தன்மையில் தக்க வைத்திருப்பவர் சான்றாண்மைக்கே பெருங்கடல் எனப்படுவார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்த போதும், தாம் நிலைதிரிய மாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

ThiruKural Transliteration:


oozhi peyarinum thaampeyaraar saandraaNmaikku
aazhi enappadu vaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore