திருக்குறள் - 357     அதிகாரம்: 
| Adhikaram: meyyunardhal

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

குறள் 357 - திருவள்ளுவர் - ThiruValluvar

"orththullam ulladhu unarin orudhalaiyaap" Thirukkural 357 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - மெய்யோதியர்பாற் கேட்ட செவியறிவுறுத்தப் பொருளை ஓர் ஓகியின் உள்ளம் உத்தியானும் அளவைகளானும் தெளியவாராய்ந்து உண்மைப் பொருளை யுணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மீண்டுப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டியதில்லை, ஓதியர் = ஞானியர் (வ.) ஒகி = யோகி(வ.) அவைகள் முன்னரே 242-ஆம் குறளுரையிற் கூறப்பட்டன. இங்குத் தெளிவு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளாத்தால் ஆராய்ந்து உள்ளதை உணர்ந்தால் ஒருபக்கமாய் பிளவுப் பட்டுள்ள பிறப்பு தேவைப்படாது.

Thirukkural in English - English Couplet:


The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

ThiruKural Transliteration:


OrththuLLam uLLadhu uNarin orudhalaiyaap
paerththuLLa vaeNdaa piRappu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore