திருக்குறள் - 835     அதிகாரம்: 
| Adhikaram: pedhaimai

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

குறள் 835 - திருவள்ளுவர் - ThiruValluvar

"orumaich cheyalaatrum paedhai ezhumaiyum" Thirukkural 835 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை - பேதையானவன்; எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு - எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் நரகத்துன்பத்தை; ‘ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொருபிறப்புள்ளேயே தேடிக்கொள்ள வல்லவனாம். "வரும்பிறவிகளிலெல்லாந் தான்புக்கழுந்தும் நிரயத்தினை" என்றும், "முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பமுழத்தற்கேதுவாங் கொடுவினைகளை" என்றும், பரிமேலழகர் கூறியிருப்பது மிக வரையிறந்திருப்பதனாலும், எழுவகைப் பிறப்பிலும் அழுந்தும் நரகென்பது உத்திக்குப் பொருந்தாமையானும், இங்கு 'எழுமைச்' சொற்குத்தொகைப் பொருளேயன்றி வகைப்பொருள் கொள்ளப்படவில்லை. 'எழுமை' நிறைவு குறித்த மரபெண்களுள் ஒன்று. அது இங்கு நீண்ட காலத்தை யுணர்த்திற்று. 'அளவு' என்னும் பெயருக்கேற்ப 'அழுந்தும்' என்றார். ஆற்றுதல் செய்ய மாட்டுதல். பேதை தனக்கு நெடுங்காலக் கேட்டைத் தானே தேடிக்கொள்வான் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதையின் தன்னிச்சையான ஒரு செயல் அடுத்தடுத்து துன்ப நரகத்தில் அழுத்தும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை.

Thirukkural in English - English Couplet:


The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

ThiruKural Transliteration:


orumaich cheyalaatrum paedhai ezhumaiyum
thaanpuk kazhundhum aLaRu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore