திருக்குறள் - 1229     அதிகாரம்: 
| Adhikaram: pozhudhukantirangal

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

குறள் 1229 - திருவள்ளுவர் - ThiruValluvar

"padhimaruntu paidhal uzhakkum madhimarundu" Thirukkural 1229 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதற்கு முன்பு நானே மதிமயங்கி நோய்த்துன் புற்றேன்.) மதி மருண்டு மாலை படர் தரும் போழ்து- இன்று, கண்டாரெல்லாரும் மதிமயங்கும் வகை மாலை வரும் பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும்- இந்நகர் முழுதும் மயங்கி நோய்த் துன்புறும். மதி மருள என்பது ' மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. பதி முழுதும் துன்புறுவதால் யான் இறந்து படுவேன் என்பதாம். மாலை மயங்கி வரும் போழ்து என் பதி நிலை கலங்கி நோயுழக்கும் என்று ரைப்பார் மணக்குடவ பரிப்பெருமாளர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தலைவனின் மருட்சியால் உறவோர்கள் மயங்குவதைப் போல் நிலவு மருண்டு மாலை படர்தரும் போழ்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும்.

Thirukkural in English - English Couplet:


If evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

ThiruKural Transliteration:


padhimaruntu paidhal uzhakkum madhimarundu
maalai padardharum pozhdhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore