திருக்குறள் - 831     அதிகாரம்: 
| Adhikaram: pedhaimai

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

குறள் 831 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paedhaimai enpadhondru yaadhenin edhangondu" Thirukkural 831 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதைமை என்பது ஒன்று யாது எனின் - பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின்; ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல் - தனக்கு கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டு விடல். கேடுதருவன வறுமை, நோய் , அறங்கடை (பாவம்) பழி, அறியாமை , பகை முதலியன. ஆக்கந் தருவன செல்வம் , உடல் நலம் , அறம் , புகழ் , அறிவு , நட்பு முதலியன. ஆகவே , பேதைமை யென்பது தானே இருமையின்பமும் புறக்கணித்தல் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மடமை என்பது என்ன என்றால் சிறு துன்பத்துக்கு அஞ்சி நற்பயனை நழுவ விடுவது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘பேதைமை’ என்பதன் தன்மை யாது?’ என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.

Thirukkural in English - English Couplet:


Familiarity What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

ThiruKural Transliteration:


paedhaimai enpadhondru yaadhenin EdhangoNdu
oodhiyam poaka vidal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore