திருக்குறள் - 1083     அதிகாரம்: 
| Adhikaram: thakaiyananguruththal

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

குறள் 1083 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pandariyaen kootren padhanai iniyarindhaen" Thirukkural 1083 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கூற்று என்பதனை பண்டு அறியேன் - காலன் என்று சொல் லப்படுவதை இதற்கு முன்பு கேட்டறிந்த தல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்போது கண்டறிந்தேன்; பெண்தகையால் பேர் அமர்க்கட்டு - அது பெண்டன்மையுடன் பெரிய அமர்த்த கண்களையுடையது. பெண்டன்மை செயல்களாற் குறிப்பா லறியப்பட்ட அச்சம் மடம், நாணம், பயிர்ப்பு என்பன. அமர்த்தல் போர் செய்தல் ' ஆல் ' உடனிகழ்ச்சிப் பொருளது. அழகும் காதல் தோன்றாத எதிர் நோக்கும் அளவிறந்து துன்புறுத்துவதால், கூற்றாக்கிக் கூறினான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னர் அறியாமல் இருந்தேன் எமன் என்பதை இனி அறிந்தேன் பெண் என்ற மீட்டேடுக்கும் திறன் கொண்டவளின் போர் தொடுக்கும் பார்வையால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘கூற்று’ என்பதனை இதன்முன்னர் அறியேன்; இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.

Thirukkural in English - English Couplet:


Death's form I formerly Knew not; but now 'tis plain to me;
He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

ThiruKural Transliteration:


paNdaRiyaen kootren padhanai iniyaRindhaen
peNtakaiyaal paeramark kattu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore