திருக்குறள் - 1089     அதிகாரம்: 
| Adhikaram: thakaiyananguruththal

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

குறள் 1089 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pinaiyaer matanhoakkum naanum udaiyaatku" Thirukkural 1089 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு- புறத்துப் பெண்மானொத்த பார்வையழகையும் அகத்து நாணழகையும் உடைய இவளுக்கு; ஏதில தந்து அணி எவனோ- இயற்கையும் தற்கிழமைச்சார்புமான இவ்வணிகளே அமைந்திருக்க, செயற்கையும் பிறிதின் கிழமைச் சார்புமான பிற அணிகளைக்கொண்டு வந்து அணிதல் எதற்காம். மடநோக்கு அழகிய பார்வை, இயற்கையழகை மறைத்தலும் இவளுக்கு வீண் சுமையாதலும் எனக்குத் துன்பந்தருதலுமன்றி; இப்புறவணிகளால் ஒருபயனுமில்லை யென்பது தலைமகன் கருத்து.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடன் இசைந்தவரிடத்தில் குனிந்த பார்வையும் நாணமும் உடையவளுக்கு அணிவதற்கு வேறு எதை தருவது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?

Thirukkural in English - English Couplet:


Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

ThiruKural Transliteration:


piNaiyaer matanhoakkum naaNum udaiyaatku
aNiyevanoa Edhila thandhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore