திருக்குறள் - 836     அதிகாரம்: 
| Adhikaram: pedhaimai

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

குறள் 836 - திருவள்ளுவர் - ThiruValluvar

"poipadum ondroa punaipoonum kaiyariyaap" Thirukkural 836 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கை அறியாப் பேதை வினைமேற்கொளின் - செய்யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செய்யின்; பொய்படும் ஒன்றோ - அதிற் புரைவிழுதல் மட்டுமோ. புனைபூணும் - அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும். 'புரைவிழுதல்' துளைபடுதல் போல் உள்ளழிதல். 'புனை முதனிலைத் தொழிலாகுபெயர். பேதை வினைசெய்யின் வினையுங்' கெட்டுத் தானும் கெடுவான் என்பதாம். பொள் - பொய்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அர்தமற்ற ஒன்றோ சரியாக அமையும்?, நுட்பம் அறியாத பேதை செயல்பட மேற்கொண்டால். ( பேதை தேவையற்றதையும் செய்ய முடியாது)

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

Thirukkural in English - English Couplet:


When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

ThiruKural Transliteration:


poipadum ondroa punaipooNum kaiyaRiyaap
paedhai vinaimaeR koLin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore