திருக்குறள் - 1187     அதிகாரம்: 
| Adhikaram: pasapparuparuvaral

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

குறள் 1187 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pullik kidandhen pudaipeyarndhaen avvalavil" Thirukkural 1187 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்- முன் பொருநாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாது ஒரு சிறிது தள்ளிப்படுத்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வு அற்று- அங்ஙனம் படுத்த அளவில் அள்ளிக்கொள்ளும் அளவாகப் பசலை வந்துதிரண்டுவிட்டது. அப்புடை பெயர்ச்சிக்கே அவ்வாறான பசலை, இப்பிரிவின் கண் எவ்வாறாகுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்பதாம். ஏகாரம்தேற்றம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கூடிக்கிடந்தேன் கொஞ்சம் விலகினேன் அதற்குள்ளாகவே அள்ளிக் கொண்டது பசப்பு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே.

Thirukkural in English - English Couplet:


I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

ThiruKural Transliteration:


pullik kidandhen pudaipeyarndhaen avvalavil
allikkol vatre pasappu,

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore