திருக்குறள் - 313     அதிகாரம்: 
| Adhikaram: innaaseyyaamai

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

குறள் 313 - திருவள்ளுவர் - ThiruValluvar

"seyyaamal setraarkkum innaadha seydhapin" Thirukkural 313 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்- தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமைகொண்டு தீங்கு செய்தவர்க்கும் துறவுபூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின்; உய்யா விழுமம் தரும்- அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத்தரும். துன்பமாவது தவமிழத்தலும் கரிசு(பாவம்) அடைதலும். துறவறத்தில் தீமைக்குத் தீமை செய்தலும் தீவினையாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைகொண்டு ஏதும் செய்யாதவர்களுக்கு துன்பம் செய்தால் பின்பு மீளமுடியாத தொல்லை ஏற்படும்.

Thirukkural in English - English Couplet:


Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.

ThirukKural English Meaning - Couplet -Translation:


In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

ThiruKural Transliteration:


seyyaamal setraarkkum innaadha seydhapin
uyyaa vizhumanh tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore