திருக்குறள் - 451     அதிகாரம்: 
| Adhikaram: sitrinanjeraamai

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

குறள் 451 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sitrinam anjum perumai sirumaidhaan" Thirukkural 451 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். '(தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருமை சிற்றினம் அஞ்சும் -பெரியார் சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - சிறியோரோ அக்கூட்டத்தைக் கண்டவுடன் அதைத் தமக்குச் சுற்றமாக எண்ணித் தழுவிக்கொள்வர். சிறியோர் சேர்க்கையால் தம் அறிவும் ஒழுக்கமும் கெடுவதும் அதனால் இருமையுந் துன்பம் நேர்வதும் நோக்கி, பெரியோர் அதனின்று விலகித்தம்மை முற்படக் காத்துக்கொள்வர். அஞ்சுதல் அஞ்சிவிலகுதல் "இனத்தை இனம் தழுவும்" "இனம் இனத்தோடே" ஆதலால் சிறியோரொடு சிறியோர் சேர்ந்து கொள்வர்.பண்பியின் தொழில் பண்பின்மேல் ஏற்றப்பட்டது.சுற்றியிருப்பது சுற்றம் சூழ்தல் அச்சுற்றத்திற்கு இனமாக வளைதல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியோர் இயல்பு கீழான இனத்தைக் கண்டால் அஞ்சி நிற்பதாகும். சிறியோர் இயல்பு அந்த இனத்தைக் தனக்குச் சுற்றமாக எண்ணும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்பர்களுக்கு அஞ்சுவதே பெருமை சிறுமைதான் உறவுகளால் வளர்ந்து விடும்.

Thirukkural in English - English Couplet:


The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.

ThiruKural Transliteration:


sitrinam anjum perumai siRumaidhaan
sutramaach choozhndhu vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore