திருக்குறள் - 1078     அதிகாரம்: 
| Adhikaram: kayamai

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

குறள் 1078 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sollap payanpatuvar saandror karumpupol" Thirukkural 1078 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள். அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள். இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர் சொல்லப் பயன்படுவர் - மேன்மக்கள் வலியாரும் மெலியாரும் சென்று தமக்கு வேண்டிய தொன்றைக் கேட்டவளவிற் கொடுத்துதவுவர்; கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும் - ஆனால், கீழ்மக்களோ; வலியார் சென்று கரும்பை ஆலையில் வைத்து நெறித்துப் பிழிந்தாற்போல, வருத்தி நெருக்கிய போதே ஒன்றை வருந்தித் கொடுப்பர். கீழ் மக்களின் இழிவு விளங்கித் தோன்றுமாறு மேன்மக்கள் இயல்பும் உடன் கூறினார். இது வேற்றுமையணி. 'கீழ்' ஆகுபெயர்.வலியாரும் வருத்தினாலன்றிக் கயவர் கொடார் என்பது இக்குறளாற் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உதாரணமாக சொல்வதற்கு பயன்படுபவர்கள் சான்றோர். கரும்பு போல் கொல்லப் பயன்படுபவர்கள் கீழானவர்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்; கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

Thirukkural in English - English Couplet:


The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

ThiruKural Transliteration:


Sollap Payanpatuvar Saandror Karumpupol
Kollap Payanpatum Keezh.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore