திருக்குறள் - 446     அதிகாரம்: 

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

குறள் 446 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thakkaa rinaththanaaith thaanozhuka vallaanaich" Thirukkural 446 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை. இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை. (தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்க அமைச்சரைச் சுற்றமாகவுடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; செற்றார் செயக்கிடந்தது இல் - பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்று மில்லை. தக்கார் அமைச்சுத் தொழிலுக்குத் தகுதியுடையார். நட்புப்பிரித்தல், பகைபெருக்குதல், உட்பகை விளைத்தல், பொருதல், வஞ்சித்தல், முதலிய பல்வேறு வலக்காரங்களை (தந்திரங்களை)ப் பகைவர் கையாளினும், தகுந்த அமைச்சர் துணைகொண்டு தானும் அறிந்தொழுக வல்லானுக்கு ஒரு தீங்குஞ் செய்ய முடியா தென்பார், 'செற்றார் செயக்கிடந்த தில் ' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்லவர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தகுதியுள்ளவர் கூட்டத்தோடு இணைந்து ஒழுக வல்லவர் இடத்தில் பகைவர் செயல் செயல்படுவது இல்லை.

Thirukkural in English - English Couplet:


The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

ThiruKural Transliteration:


thakkaa rinaththanaaith thaanozhuka vallaanaich
setraar seyakkitandha thil.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore