திருக்குறள் - 348     அதிகாரம்: 
| Adhikaram: thuravu

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

குறள் 348 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thalaippattaar theerath thurandhaar mayangi" Thirukkural 348 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார். இது மறுமைப் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார், மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார். (முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தீரத் துறந்தார் தலைப்பட்டார் -முற்றத்துறந்தவர் வீட்டை யடைந்து உயர்ந்தார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனந் துறவாதவர் மயங்கிப் பிறவி வலைக்குள் அகப் பட்டார். மயங்குதல் நிலையாதவற்றை நிலைத்தனவாகக் கருதுதலும் ஏதேனுமொரு பொருளின்கண் சிறிதேனும் பற்றுவைத்தலும். 'மற்றையவர்' முற்றத் துறவாதாரும் சற்றுந் துறவாதாரும். தலைப் படுதல் அடைதல் அல்லது உயர்தல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீர்க்கமாக ஆராய்ந்து தலைபட்டவரே துறந்தவர்,மற்றவர்கள் பயன் கருதி மயக்கத்தால் வலைபட்டவர்கள்.

Thirukkural in English - English Couplet:


Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

ThiruKural Transliteration:


thalaippattaar theerath thuRandhaar mayangi
valaippattaar matrai yavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore