திருக்குறள் - 436     அதிகாரம்: 
| Adhikaram: kutrangatidhal

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

குறள் 436 - திருவள்ளுவர் - ThiruValluvar

"than kutram neekkip pirarkutrang kaankirpin" Thirukkural 436 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம். இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின், இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது? (அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் - முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது ? ஒன்று மில்லை. இது குடிகளின் வழக்குத் தீர்த்துத் தண்டித்தல் பற்றியது. பிறர் குற்றங்கண்டு தண்டிப்பவன் முன்பு தான் அக்குற்றமில்லாதவனா யிருத்தல் வேண்டும். அரசன் தன் குற்றத்தை நீக்காது பிறர் குற்றத்திற்குத் தண்டிப்பதே கு ற் ற மா ம். அங்ஙன மன்றித்தன் குற்றத்தை நீக்கியபின் தண்டிப்பின் அது முறைசெய்தலாம். அது அவன் கடமையாதலால் 'என்குற்ற மாகும்' என்றார். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடைய குற்றத்தினை முன்னதாகவே கண்டுகொண்டு அதனை நீக்கிப் பின்னர், பிறர் குற்றத்தினைக் காணவல்லவராக இருந்தால் தலைவனுக்கு நேரக்கூடிய குற்றம் யாது?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னிடம் உள்ள குறைகளை அழித்துப் பிறரது குறையை காணும் வழிகாட்டுபவருக்கு எந்த குறையும் இருக்காது.

Thirukkural in English - English Couplet:


Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

ThiruKural Transliteration:


than-kutram neekkip piRarkutranG kaaNkiRpin
en-kutra maakum iRaikku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore