திருக்குறள் - 875     அதிகாரம்: 

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

குறள் 875 - திருவள்ளுவர் - ThiruValluvar

"than thunai indraal pakaiyirandaal thaanoruvan" Thirukkural 875 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் துணை இன்று- தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் பகை இரண்டு- தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் ஒருவன் -தான் தனியனாகவும் இருப்பவன் ; அவற்றின் ஒன்று இன் துணையாகக்கொள்க- அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க. தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும்.உண்மையான துணையாகச் செய்து கொள்ள வென்பார் இன்றுணையா என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஆக என்னும் வினையெச்ச வீறு ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. கொள்கவற்றின் என்பதில் அகரந்தொக்கது. இவ்விரு குறளாலும் நட்பாக்கக் கூடியபகை கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு துணை இல்லாமல் பகை கொண்டவர்கள் இரண்டாக இருந்தால் அதில் ஒன்றை இனிய துணையாக ஏற்கவேண்டும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு’ என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

ThiruKural Transliteration:


than-thuNai indraal pakaiyiraNdaal thaanoruvan
in-thuNaiyaak koLkavatrin ondru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore