திருக்குறள் - 56     அதிகாரம்: 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

குறள் 56 - திருவள்ளுவர் - ThiruValluvar

"tharkaaththuth tharkontaar paenith thakai" Thirukkural 56 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தற்காத்து-தன் கற்பையும் உடல்நலத்தையுங் காத்து; தற்கொண்டாற் பேணி - தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி; தகைசான்ற சொல்காத்துதம் - இருவரையும் பற்றிய தகுதிவாய்ந்த உலக மதிப்பையுங் காத்து; சோர்விலாள் - பிறர்க்குச் செய்யும் அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள்; பெண் - இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னையும் காத்துக் கொண்டு தன்னைக் கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு (இவைகளில் மறதி) இல்லாதவளே மனைவியாவாள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னை காத்து தான் கொண்டவர்களை பாதுகாத்து தகுதிக்கு உதாரனமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருபவளே பெண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.

Thirukkural in English - English Couplet:


Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

ThirukKural English Meaning - Couplet -Translation:


She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

ThiruKural Transliteration:


thaRkaaththuth thaRkoNtaaR paeNith thakaisaandra
soRkaaththuch soarvilaaL peN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore