திருக்குறள் - 464     அதிகாரம்: 
| Adhikaram: therindhuseyalvakai

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

குறள் 464 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thelivi ladhanaith thodangaar ilivennum" Thirukkural 464 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார். (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தௌ¤வுள் வழித் தொடங்குக என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாதற்கு அஞ்சும் மானியர்; தெளிவு இலதனைத் தொடங்கார்- வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார். தொடங்கின் இடையில் மடங்கவும் தோல்வியடையவும் நேரு மாதலின் ' தொடங்கார்' என்றார். இழிவு தோல்வியடைந்து கெடுவதுடன் உலகோர் கூறும் பழியால் நேர்வது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கு இழிவு எனப்படும் குற்றம் உண்டாவதற்கு அஞ்சுபவர்கள், இனத்துடனும் தனித்தும் ஆராய்ந்து துணியப்படாத தொழிலைத் தொடங்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீர்க்கமாக அறியமுடியா ஒன்றை செய்ய முற்படமாட்டார்கள் இகிழ்ச்சி என்ற குற்றத்திற்கு அஞ்சுபவர்கள்.

Thirukkural in English - English Couplet:


A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

ThiruKural Transliteration:


theLivi ladhanaith thodangaar iLivennum
Edhappaatu anju pavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore