திருக்குறள் - 1236     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

குறள் 1236 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thotiyodu thoalnekizha noval avaraik" Thirukkural 1236 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[தானாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குச் சொல்லியது.] தொடியொடு தோள்நெகிழ- யான் ஆற்றியிருக்கவும் என்வயப்படாது கடகங்கள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்- நீ அவற்றைக் கண்டவளவில் காதலரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது உள்ளே நோகின்றேன். யான் ஆற்றேனாகின்றது காதலர் வராததிற்கன்று; நீ அவரைக் குறைகூறுகின்றதற்கே யென்பதாம். 'ஒடு' மேற்கூறியதே.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வளையலுடன் தொள்களும் வேதனையில் நெகிழ்வதால் அவரை கொடியவர் எனக் கூறுகிறேன் நொந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே!

Thirukkural in English - English Couplet:


grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

ThiruKural Transliteration:


thotiyodu thoalnekizha noval avaraik
kotiyar enakkooral nondhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore