திருக்குறள் - 1201     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

குறள் 1201 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ullinum theeraap perumakizh seydhalaal" Thirukkural 1201 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , முன் கூடிய ஞான்றே இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம் . இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது படர் மிகுதி தன்கண்ணதாக நினைந்த தலைமகட்கும் உரித்தாகலின் அவ்வியைபுபற்றித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.] (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து. (தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) (இ-ரை.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்-முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு பிரிந்தவிடத்து நினைத்தாலும் அன்றே பெற்றாற்போல நீங்காத பெருமகிழ்ச்சியைத்தருதலால்; கள்ளினும் காமம் இனிது-உண்ட விடத்தல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினுங் காமம் இன்பந்தருவதாயுள்ளது தலைமகளை மறவாமை கூறியவாறு. முன்பு கண்டார் மகிழ் செய்யும் (குறள்-1090) என்ற காமம் இங்குக் கருதினாலும் காமம் இங்குக் கருதினாலும் மகிழ் செய்யும் என்று கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்தாலே அளவற்ற பெருமகிழ்வை உண்டாக்குவதால் மதுவை காட்டிலும் காமம் இனிது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்.

Thirukkural in English - English Couplet:


From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight

ThiruKural Transliteration:


ullinum theeraap perumakizh seydhalaal
kallinum kaamam inidhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore