திருக்குறள் - 309     அதிகாரம்: 
| Adhikaram: vekulaamai

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

குறள் 309 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ulliya thellaam udaneydhum ullaththaal" Thirukkural 309 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்- தவஞ் செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதுங் கருதானெனின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும்- அவன் பெறக்கருதிய பேற்றையெல்லாம் ஒருங்கே பெறுவான். 'உள்ளத்தால்' என்னும் மிகைச்சொல் அருள்பயின்ற வுள்ளம் என்பதை யுணர்த்தும். இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் அடங்க "உள்ளிய தெல்லாம்" என்றார். சினம் கருத்து வடிவில் இல்லையெனின் சொற்செயல் வடிவிலும் இராதென்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


துறவியானவன் தன மனத்தால் கோபத்தினை ஒருபோதும் நினைக்காமல் இருப்பானானால், அவன் கருதிய செல்வங்கள் எல்லாவற்றினையும் ஒருங்கே பெறுவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்ததை எல்லாம் உடனே அடையும் உள்ளத்தில் சினம் இருந்தால் எப்படி சாத்தியமாகும்?

Thirukkural in English - English Couplet:


If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

ThiruKural Transliteration:


uLLiya thellaam udaneydhum uLLaththaal
uLLaan vekuLi enin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore