திருக்குறள் - 880     அதிகாரம்: 

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

குறள் 880 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uyirppa ularallar mandra seyirppavar" Thirukkural 880 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார். இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார்- தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை யிருந்தும் இகழ்ச்சியால் அதைச் செய்யாது விட்டுவிட்டவர்; மன்ற உயிர்ப்ப உளர் அல்லர்- பின்பு, உறுதியாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிர் வாழ்பவராகார். முன்பு மெலியராயிருந்த பகைவர் பின்பு வலியராகித் தம்மை வேரொடு களைதல் திண்ணமாதலின், 'உயிர்ப்பவுளரல்லர் மன்ற' என்றார் 'எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்' என்பதுபோல், அவர் உயிர்த்த அளவிலேயே இறந்து விடுவர் என்று உரைப்பினும் அமையும். 'மன்ற' என்னுஞ் சொற்கு முன்பு உரைத்தது போல் உரைக்க. இக்குறளால் பகையை முளையிற்களையாவழி நேருங்கேடு கூறப்பட்டது. முந்தின குறளும் இதுவும் பகை முதிர்ச்சியே பற்றிக் கூறினும், அது 'கைகொல்லும்' முதிர்ச்சியும் இது மெய்கொல்லும் முதிர்ச்சியும் பற்றியன என வேறுபாடறிக.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உயிரோடு இருப்பவர் எல்லாம் உண்மையாக வாழ்பவர் இல்லை வெளிப்படையாக குற்றம் செய்பவரின் பெருமையை அழிக்கவில்லை என்றால்

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார்.

Thirukkural in English - English Couplet:


But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

ThiruKural Transliteration:


uyirppa uLarallar mandra seyirppavar
semmal sidhaikkalaa thaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore