திருக்குறள் - 726     அதிகாரம்: 
| Adhikaram: avaiyanjaamai

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

குறள் 726 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaaloten van kannar allaarkku nooloten" Thirukkural 726 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என்-மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்புண்டு?; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்-அதுபோல, நுண்ணறிஞரவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு? "எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே." என்று தொல்காப்பியமும் (சொல். கிளவி. 61). "ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே." என்று நன்னூலும் (பொது. 7) கூறியவாறு, வாள் என்பது வில்வேல் முதலிய பிற படைக்கலங்களையுந் தழுவும். 'என்' என்னும் வினா ஈரிடத்தும் எதிர்மறை விடையை அவாவி நின்றது. நுண்ணிய அறிஞர் கூட்டம் நுண்ணவை. இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை. "அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும்-நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று." என்பது நீதிநெறி விளக்கம் (6)

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு, நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.

Thirukkural in English - English Couplet:


o those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.

ThiruKural Transliteration:


vaaLoten van-kaNNar allaarkku nooloten
nuNNavai anju pavarkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore