திருக்குறள் - 689     அதிகாரம்: 
| Adhikaram: thoodhu

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

குறள் 689 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vitumaatram vaendharkku uraippaan vadumaatram" Thirukkural 689 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சென்று கூறுபவன்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய்தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாயிருத்தல் வேண்டும். வடு-குற்றம். தாழ்வான சொற்களைச் சொல்லுதல் தன் தகுதிக் கேற்காத குற்றமாதலின், ' வடுமாற்றம்' என்றார். வாய் சோராமைக்கு ஏதுவான வன்கண் என்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன் அரசன் சொல்லிய வார்த்தைகளை வேற்று அரசர்களுக்குச் சொல்லுதற்கு உரியவன், தனக்கு வரும் குற்றத்திற்கு அஞ்சித் தாழ்வான வார்த்தைகளை வாய் சோர்ந்தும் சொல்லாத வலிமையுடையவனாவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தவிர்க வேண்டியதை அரசுக்கு எடுத்துரைப்பான் வலிக்காமல் சோர்வற்ற வார்த்தை பயன்படுத்தும் திடமானவன்.

Thirukkural in English - English Couplet:


His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

ThiruKural Transliteration:


vitumaatram vaendharkku uraippaan vadumaatram
vaaisaeraa van-ka Navan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore