திருக்குறள் - 684     அதிகாரம்: 
| Adhikaram: thoodhu

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

குறள் 684 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arivuru vaaraaindha kalvi im moondran" Thirukkural 684 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு-இயற்கையான அறிவும்; உரு-கண்டார் மதிக்குந் தோற்றப் பொலிவும்; ஆராய்ந்த கல்வி-ஆராய்ச்சியோடு கூடிய கல்வியும்; இம் மூன்றன் செறிவு உடையான்-ஆகிய இம் முன்றும் நிறைந்தவன்; வினைக்குச் செல்க-வேற்றரசரிடம் தூதனாகச் செல்க. இம் மூன்றும் நிறைந்தவன் செல்லின், தூதுவினை சிறப்பாக முடியுமென்பது கருத்து. பல நூல்களையும் அவற்றின் வேறுபட்டவுரைகளையுங் கற்று உலகியலொடு பொருந்தத் தானும் ஆராய்ந்ததை, 'ஆராய்ந்த கல்வி' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இயற்கையான அறிவும், கண்டார் விரும்பும் தோற்றமும், பற்பல வகையில் ஆராய்ந்த கல்வியும் ஆகிய இம்மூன்றும் நிறைந்திருக்கப் பெற்றவனே வேற்றரசரிடம் தூது செல்லக் கடவன்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு, உருவம், தேர்ந்த கல்வி, இம் மூன்றையும் செழுமையான அடைந்தவர் செல்லலாம் செயல்முடிக்க.

Thirukkural in English - English Couplet:


Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

ThiruKural Transliteration:


aRivuru vaaraaindha kalvi-im moondran
seRivutaiyaan selka vinaikku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore