திருக்குறள் - 506     அதிகாரம்: 
| Adhikaram: therindhudhelidhal

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

குறள் 506 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atraaraith thaerudhal ompuka matravar" Thirukkural 506 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். ('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றாரைத் தேறுதல் ஓம்புக - மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக ; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் வேறு தொடர்பில்லாத வராதலால் ; பழிநாணார் - பழிக்கு அஞ்சார். பிள்ளைகளைப் பெறாதவர்க்குப் பிறரிடத்து அன்புண்டாகா தென்பதும் , உற்றா ருறவினரில்லாதவர்க்குப் பழிபளகு (பாவம்) பற்றிய அச்சமிராதென்பதும் , பொதுவான உலக நம்பிக்கை . ஆதலால் , அத்தகையோரை வினைக்கமர்த்தின் ,குடிகள் கெடுவதொடு பொறுப்பற்ற வினையால் அரசுங் கெடும் என்பதாம் . 'பற்றிலர்' என்பதனால் உறவினர் என்பது வருவிக்கப்பட்டது . ஓம்புதல் காத்தல் ; இங்கு நிகழாவாறு காத்தல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாதவரை வளர்க்க விரும்பவேண்டும் மற்றவர்கள் பற்று இல்லாமல் பழிக்கு அஞ்சாதவர்கள்.

Thirukkural in English - English Couplet:


Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.

ThiruKural Transliteration:


atraaraith thaeRudhal Ompuka matravar
patrilar naaNaar pazhi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore