திருக்குறள் - 626     அதிகாரம்: 
| Adhikaram: itukkan azhiyaamai

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

குறள் 626 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atraemendru allar patupavoa petraemendru" Thirukkural 626 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெற்றேம் என்று ஒம்புதல் தேற்றாதவர் - செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; அற்றேம் என்று அல்லல் படுபவோ - வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார். "அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்" ( நாலடி. 2) இவ்வுலகத்தில், இன்பமுந் துன்பமும் ஒப்பக் கொள்பவர் செல்வக் காலத்தில் மகிழ்ந்து அதை இறுகப் பற்றாமையால் , வறுமைக்காலத்தில் வருந்துவதும் செல்வமின்மையை உணர்வதும் இல்லை யென்றார். 'தேற்றாதவர்' தன்வினைப்பொருளில் வந்த பிறவினைச்சொல். தேற்றுதல் தெளிந்தறிதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


விலகிவிட்டது என்று வேதனைபடலாமா ? பெற்றதைக் கொண்டு சரியாக வாழாதவர்.

Thirukkural in English - English Couplet:


Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.

ThiruKural Transliteration:


atraemendru allaR patupavoa petraemendru
ompudhal thaetraa thavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore